அகநானூறு - 131. பாலை
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என |
5 |
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
10 |
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவரு தகுந கானம், 'நம்மொடு வருக' என்னுதிஆயின், வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. |
15 |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 131. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க