அகநானூறு - 130. நெய்தல்
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை |
5 |
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் |
10 |
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் போது புறங்கொடுத்த உண்கண் மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே. |
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 130. நெய்தல் , இலக்கியங்கள், அகநானூறு, நெய்தல், போது, முன், சங்க, எட்டுத்தொகை