அகநானூறு - 129. பாலை
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், |
5 |
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் |
10 |
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப, கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல் திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், |
15 |
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 129. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க