அகநானூறு - 128. குறிஞ்சி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே யாமம் கொள வரின் கனைஇ, காமம் கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. எவன்கொல் வாழி, தோழி! மயங்கி |
5 |
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி, கான நாடன் வரூஉம், யானைக் |
10 |
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, மாரி வானம் தலைஇ நீர் வார்பு, இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? |
15 |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 128. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, இட்டு, இன்றே, சங்க, எட்டுத்தொகை