அகநானூறு - 126. மருதம்
நின் வாய் செத்து நீ பல உள்ளி, பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று |
5 |
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் |
10 |
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, |
15 |
திதியனொடு பொருத அன்னி போல விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், |
20 |
மின் நேர் மருங்குல், குறுமகள் பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? |
25 |
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 126. மருதம், இலக்கியங்கள், அகநானூறு, மருதம், கெழு, தலைமகன், நெடுங், வாய், எட்டுத்தொகை, சங்க