அகநானூறு - 124. முல்லை
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து சென்றீக' என்பஆயின், வேந்தனும் நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு இன்றே புகுதல் வாய்வது; நன்றே. |
5 |
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, பாசறை வருத்தம் வீட, நீயும் மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, |
10 |
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, காலை எய்த, கடவுமதி மாலை அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை அரமிய வியலகத்து இயம்பும் |
15 |
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. |
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 124. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, நெடு, எட்டுத்தொகை, சங்க