அகநானூறு - 123. பாலை
உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல, வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும் கான யானை கவின் அழி குன்றம் இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த |
5 |
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் மழை மருள் பல் தோல் மா வண் சோழர் |
10 |
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை, இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங் கடல் ஓதம் போல, ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே. |
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 123. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, கடல், எட்டுத்தொகை, சங்க