அகநானூறு - 119. பாலை
'நுதலும் தோளும், திதலை அல்குலும், வண்ணமும், வனப்பும், வரியும், வாட வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி, 'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது, ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, |
5 |
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள, உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, |
10 |
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை, தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள |
15 |
மறப் புலி உழந்த வசி படு சென்னி உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி, படி முழம் ஊன்றிய நெடு நல் யானை கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை, மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? |
20 |
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 119. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, என்னாது, எட்டுத்தொகை, சங்க