அகநானூறு - 118. குறிஞ்சி
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், தேம் கமழ் இணர வேங்கை சூடி, தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
5 |
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
10 |
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; அளியள்தான், நின் அளி அலது இலளே! |
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 118. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, நாள், அஞ்சுதும், சங்க, எட்டுத்தொகை