அகநானூறு - 120. நெய்தல்
நெடு வேள் மார்பின் ஆரம் போல, செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
5 |
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, அழல் தொடங்கினளே பெரும! அதனால் கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
10 |
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை அன்றில் அகவும் ஆங்கண், |
15 |
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 120. நெய்தல் , நெய்தல், இலக்கியங்கள், அகநானூறு, தலைமகனை, சிறு, சங்க, எட்டுத்தொகை, நெடு