அகநானூறு - 103. பாலை
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, காமர் சேவல் ஏமம் சேப்ப; முளி அரில் புலம்பப் போகி, முனாஅது |
5 |
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் |
10 |
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக நம்மொடு பசலை நோன்று, தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே? |
15 |
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 103. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நிழல், எட்டுத்தொகை, சங்க