அகநானூறு - 1. பாலை
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
5 |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
10 |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் வழங்குநர் இன்மையின், வெளவுநர் மடிய, சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
15 |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 1. பாலை , இலக்கியங்கள், போல், அகநானூறு, பாலை, எட்டுத்தொகை, சங்க