அகநானூறு - 2. குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது |
5 |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம், எளிதின், நின் மலைப் பல் வேறு விலங்கும், எய்தும் நாட! குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
10 |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, இவளும், இனையள்ஆயின், தந்தை அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
15 |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 2. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, இன்பம், எட்டுத்தொகை, சங்க