ஐங்குறுநூறு - 9. புலவி விராய பத்து
குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமை அரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும் மலரணி வாயில் பொய்கை ஊரநீ என்னை நயந்தனென் என்றநின் மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே. | 81 |
வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள் மகிழ்நன் மார்பின் அவிழினர் நறுந்தார்த் தாதுன் பறவை வந்துஎம் போதார் கூந்தல் இருந்தன எனவே. | 82 |
மணந்தனை அருளாய் ஆயினும் பையத் தணந்தனை யாகி உய்ம்மோ நும்மூர் ஒண்தொடி முன்கை ஆயமும் தண்துறை யூரன் பண்டெனப் படற்கே. | 83 |
செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள் கண்ணிற் காணின் எனா குவள்கொல் நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே. | 84 |
வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறுவில் யானர்மலிகேழ் ஊரநீ சிறுவரின் இனைய செய்தி நகாரோ பெருமநின் கண்டிசி ணோரே. | 85 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 9. புலவி விராய பத்து, இலக்கியங்கள், புலவி, ஐங்குறுநூறு, விராய, பத்து, ஊரநீ, சங்க, எட்டுத்தொகை