ஐங்குறுநூறு - 9. புலவி விராய பத்து
வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல் நீள்வயல் நண்ணி இமிழும் ஊர எம் இவன் நல்குதல் அரிது நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே. | 86 |
பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர் கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் யாணர் ஊரைநின் மனையோள் யாரையும் புலக்கும் எம்மைமற் றெவனோ. | 87 |
வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத் தண்துறை யூரனை எவ்வை எம்வயின் வருதல் வேண்டுதும் என்ப தொல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே. | 88 |
அம்மவாழி பாண எவ்வைக்கு எவன் பெரி தளிக்கும் என்ப பழனத்து வண்டு தாதூதும் ஊரன் பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே. | 89 |
மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல் வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல் அன்ன தாகலும் அறியாள் எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே. | 90 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 9. புலவி விராய பத்து, இலக்கியங்கள், புலவி, ஐங்குறுநூறு, விராய, பத்து, என்ப, மாண்குணம், எட்டுத்தொகை, சங்க