ஐங்குறுநூறு - 8. புனலாட்டுப் பத்து
பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின் தண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள் ஒள்தொடி மடவரால் நின்னோடு அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. | 76 |
அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல் பேரூர் அலர்எழ நீரலைக் கலங்கி நின்னொடு தண்புணல் ஆடுதும் எம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே. | 77 |
கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த சிறையழி புதுப்புனல் ஆடுகம் எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புனையே. | 78 |
புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள் யார்மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந யார்மகள் ஆயினும் அறியா நீயார் மகனைஎம் பற்றியோயே. | 79 |
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ நலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித் தலைப்பெயல் செம்புனல் ஆடித் தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே. | 80 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 8. புனலாட்டுப் பத்து, இலக்கியங்கள், பத்து, புனலாட்டுப், ஐங்குறுநூறு, புதுப்புனல், யார்மகள், மகிழ்நநின், தண்புணல், சங்க, எட்டுத்தொகை, மகளிர்க்குத்