ஐங்குறுநூறு - 7. கிழத்தி கூற்றுப்பத்து
நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண்மத்தி கழாஅர் அன்ன நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே. | 61 |
இந்திர விழவின் பூவின் அன்ன புந்தலைப் பேடை வரிநிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்துஇனி எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் தேரே. | 62 |
பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊர எம்நலம் தொலைவ தாயினும் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே. | 63 |
அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர் ஒருவரும் இருவரும் அல்லர் பலரே தெய்யஎம் மறையா தீமே. | 64 |
கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வனை ஈன்றஎம் மேனி முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே. | 65 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 7. கிழத்தி கூற்றுப்பத்து, இலக்கியங்கள், கிழத்தி, ஐங்குறுநூறு, கூற்றுப்பத்து, நல்லோர், அன்ன, எட்டுத்தொகை, சங்க