ஐங்குறுநூறு - 6. தோழி கூற்றுப் பத்து
பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம்பெறு சுடர்நுதல் தேம்ப எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே. | 56 |
பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின் ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய அனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே. | 57 |
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி பிறர்க்கு மனையையால் வாழி நீயே. | 58 |
கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்குமருந் தாகிய யான்இனி இவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே. | 59 |
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும் கழனியுரநின் மொழிவல் என்றும் துங்சுமனை நெடுநகர் வருதி அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே. | 60 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 6. தோழி கூற்றுப் பத்து, அன்ன, இலக்கியங்கள், தோழி, இவள், ஐங்குறுநூறு, கூற்றுப், பத்து, எட்டுத்தொகை, சங்க