ஐங்குறுநூறு - 7. கிழத்தி கூற்றுப்பத்து
உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ யாரவள் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் பதல்வனை யுள்ளிநின் வளவமனை வருதலும் வெளவி யோனே. | 66 |
மடவள் அம்மநீ இனிக்கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலம் தருக்கும் என்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே. | 67 |
கன்னி விடியல் கணக்கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர பேணா ளோநின் பெண்டே யாந்தன் அடங்கவும் தான்அடங் கலளே. | 68 |
கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே பலராடு பெருந்துரை மலரொடு வந்த தண்புனல் வண்டல் உய்த்தென உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. | 69 |
பழனப் பன்மீன் அருந்த நாரை கழனி மருதின் சென்னிச் சேக்கும் மாநீர்ப் பொய்கை யாணர் ஊர தூயர் நறியர்நின் பெண்டிர் பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே. | 70 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 7. கிழத்தி கூற்றுப்பத்து, இலக்கியங்கள், கிழத்தி, ஐங்குறுநூறு, கூற்றுப்பத்து, பெண்டே, எட்டுத்தொகை, சங்க