ஐங்குறுநூறு - 6. தோழி கூற்றுப் பத்து
நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர புளிங்காய் வேட்கைத்து அன்றுநின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே. | 51 |
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள் இனைய எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே. | 52 |
துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர நீயுற்ற சூளே. | 53 |
திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ ஊரின் ஊரனை நீதர வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே. | 54 |
கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும் தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள் நல்லணி நயந்துநீ துறத்தலின் பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே. | 55 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 6. தோழி கூற்றுப் பத்து, இலக்கியங்கள், தோழி, ஐங்குறுநூறு, கூற்றுப், பத்து, தேனூர், சங்க, எட்டுத்தொகை