ஐங்குறுநூறு - 5. புலவிப் பத்து
நினக்கே அன்றுஅது எமக்குமார் இனிதே நின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை யாகி ஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே. | 46 |
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த அகன்பெரு வட்டி நிறைய மனையோள் அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர மாணிமழை ஆயம் அறியும்நின் பாணன் போலப் பலபொய்த் தல்லே. | 47 |
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள் வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள் யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர வேண்டேம் பெருமநின் பரத்தை யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே. | 48 |
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள் சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம் யாணர் ஊரநின் பாண்மகன் யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே. | 49 |
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் வஞ்சி ஓங்கிய யாணர் ஊர தஞ்சம் அருளாய் நீயேநின் நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. | 50 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 5. புலவிப் பத்து, இலக்கியங்கள், புலவிப், ஐங்குறுநூறு, பத்து, நிறைக்கும், யாணர், மனையோள், பாண்மகன், ஈண்டுநீ, எட்டுத்தொகை, சங்க, தல்லே, பாண்மகள்