ஐங்குறுநூறு - 5. புலவிப் பத்து
தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால் தன்சொல் உணர்ந்தோர் மேனி பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே. | 41 |
மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ யாணர் ஊரநின் மானிழை யரிவை காவிரி மலிர்நிறை யன்னநின் மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே. | 42 |
அம்பணத் தன்ன யாமை யேறிச் செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும் யாணர் ஊர நின்னினும் பாணன் பொய்யன் பல்சூ ளினனே. | 43 |
தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத் தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு அதுவே ஐயநின் மார்பே அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே. | 44 |
கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து வேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும் யாறுஅணிந் தன்றுநின் ஊரே பச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே. | 45 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 5. புலவிப் பத்து, இலக்கியங்கள், புலவிப், ஐங்குறுநூறு, பத்து, அதுவே, ஆயின், யாமை, சங்க, எட்டுத்தொகை, யாணர்