ஐங்குறுநூறு - 50. வரவுச் சிரப்புரைத்த பத்து
காரெதிர் காலையாம் ஓவின்று நலிய நொந்துநொந்து உயவும் உள்ளமொடு வம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே. | 491 |
நின்னே போலும் மஞ்ஞை ஆலநின் நன்னுதல் நாறும் முல்லை மலர நின்னே போல மாமருண்டு நோக்க நின்னே உள்ளி வந்தனென் ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே. | 492 |
ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க மாதர் மான்பிணை மறியொடு மறுகக் கார்தொடங் கின்றே காலை நேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே. | 493 |
வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத் தண்கமழ் புறவின் முல்லிஅ மலர இன்புறுத் தன்று பொழுதே நின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே. | 494 |
செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப் புலம்தீர்ந்து இனிய வாயின புறவே பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு முளெயிற்று அரிவையாம் வந்த ஆறே. | 495 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 50. வரவுச் சிரப்புரைத்த பத்து, இலக்கியங்கள், நின்னே, வரவுச், ஐங்குறுநூறு, சிரப்புரைத்த, பத்து, விரைந்தே, எட்டுத்தொகை, சங்க