ஐங்குறுநூறு - 49. தேர் வியங்கொண்ட பத்து
பெரும்புன் மாலை ஆனது நினைஇ அரும்படர் உழைத்தல் யாவது என்றும் புல்லி ஆற்றாப் புரையோள் காண வன்புதெரிந்து ஊர்மதி வலவநின் புள்ளியல் கலைமாப் பூண்டதேரே. | 486 |
இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே செறிதொடி உள்ளம் உவப்ப மதியுடை வலவ ஏமதி தேரே. | 487 |
கருவி வானம் பெயல் தொடங்கின்றே பெருவிறல் காதலி கருதும் பொழுதே விரிஉளை நன்மாப் பூட்டிப் பருவரல் தீரக் கடவுமதி தேரெ. | 488 |
அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப மெண்புல முல்லை மலரும்மாலைப் பையுள் நெஞ்சின் தையல் உவப்ப நுண்புரி வண்கயிறு இயக்கிநின் வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. | 489 |
அம்தீம் கிளவி தான்தர எம்வயின் வந்தன்று மாதோ காரே ஆவயின் ஆய்த்தொடி அரும்படர் தீர ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே. | 490 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 49. தேர் வியங்கொண்ட பத்து, இலக்கியங்கள், கடவுமதி, வியங்கொண்ட, தேர், பத்து, ஐங்குறுநூறு, விரைந்தே, நெடுந்தேர், உவப்ப, பொழுதே, சங்க, அரும்படர், எட்டுத்தொகை