ஐங்குறுநூறு - 50. வரவுச் சிரப்புரைத்த பத்து
மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப மாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப் பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர் தோள்துணை யாக வந்தனர் போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே. | 496 |
குறும்பல் கோதை கொன்றை மலர நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே பேரியல் அரிவைநின் உள்ளிப் போர்வெம் குருசில் வந்த மாறே. | 497 |
தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன வேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென விரைசெலல் நெடுந்தேர் கடைஇ வரையக நாடன் வந்த மாறே. | 498 |
பிடவம் மலரத் தளவம் நனையக் கார்கவின் கொண்ட கானம் காணின் வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாது வந்தனர் ஆல்நம் காதலர் அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே. | 499 |
கொன்றைப் பூவின் பசந்த உண்கண் குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத் தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர் வியன்நெடும் பாசறை நீடிய வயமான் தோன்றல்நீ வந்த மாறே. | 500 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 50. வரவுச் சிரப்புரைத்த பத்து, இலக்கியங்கள், மாறே, வரவுச், ஐங்குறுநூறு, சிரப்புரைத்த, பத்து, வந்த, எட்டுத்தொகை, சங்க, வந்தனர்