ஐங்குறுநூறு - 4. தோழிக்கு உரைத்த பத்து
அம்ம வாழி தோழி யூரன் நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்து உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே கயலெனக் கருதிய் உண்கண் பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே. | 36 |
அம்ம வாழி தோழி மகிழ்நன் நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க வல்லன் வல்லன் பொய்த்தல் தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லெ | 37 |
அம்ம வாழி தோழி மகிநன் தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் தந்தளிர் வெளவும் மேனி ஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே. | 38 |
அம்ம வாழி தோழி யூரன் வெம்முலை யடைய முயங்கி நம்வயின் திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப் பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே. | 39 |
அம்ம வாழி தோழி மகிநன் ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே. | 40 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 4. தோழிக்கு உரைத்த பத்து, தோழி, வாழி, அம்ம, இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, தோழிக்கு, உரைத்த, வல்லன், மகிநன், முன்கை, உண்கண், மன்னே, எட்டுத்தொகை, யூரன், சங்க