ஐங்குறுநூறு - 4. தோழிக்கு உரைத்த பத்து
அம்ம வாழி தோழி மகிழ்நன் கடனன்று என்னும் கொல்லோ நம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறை உடனாடு ஆயமோடு உற்ற சூளே. | 31 |
அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள் அழுப என்பஅவன் பெண்டிர் தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. | 32 |
அம்ம வாழி தோழி மகிழ்நன் மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப் பெண்டிரோடு ஆடும் என்பதன் தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே. | 33 |
அம்ம வாழி தோழி நம்மூர்ப் பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல் தாதுஏர் வண்ணம் கொண்டன ஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே. | 34 |
அம்ம வாழி தோழி நம்மூர்ப் பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால் நிறத்தினும் நிழற்றுதல் மன்னே இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. | 35 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 4. தோழிக்கு உரைத்த பத்து, வாழி, தோழி, அம்ம, இலக்கியங்கள், உரைத்த, மகிழ்நன், ஐங்குறுநூறு, பத்து, தோழிக்கு, ஆம்பல், நம்மூர்ப், சங்க, எட்டுத்தொகை