ஐங்குறுநூறு - 45. பாசறைப் பத்து
முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள நல்ல காண்குவ மாஅ யோயே பாசறை அருந்தொழில் உதவிநம் காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே. | 446 |
பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை யாடு சிறைவண்டு அழிப்பப் பாடல் சான்ற காண்கம்வாள் நுதலே. | 447 |
தழங்குரல் முரசம் காலை இயம்பக் கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந் தனனே. மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயல் கனைதுளி கார் எதிர்ந் தன்றே அஞ்சில் ஓதியை உள்லுதொறும் துஞ்சாது அலமரல் நாமெதிர்ந் தனமே. | 448 |
முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே ஒள்நுதல் காண்குவம் வேந்துவினை முடினே. | 449 |
முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து நாடுமுன் னியரோ பீடுகெழ வேந்தன் வெய்ய உயிர்க்கு நோய்தணியச் செய்யோள் இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே. | 450 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 45. பாசறைப் பத்து, இலக்கியங்கள், பாசறைப், ஐங்குறுநூறு, பத்து, வேந்தன், எதிர்ந், அருந்தொழில், சங்க, எட்டுத்தொகை, முல்லை