ஐங்குறுநூறு - 45. பாசறைப் பத்து
ஐய ஆயின செய்யோள் களவி கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென நோய் நன்கு செய்தன் எமக்கே யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே. | 441 |
பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின் விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து அருந்ததி அனைய கற்பின் குரும்பை மணிப்பூண் புதல்வன் கற்பின் | 442 |
நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று இலங்கு நிலவின் இளம்பிறை போலக் காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல் விண்ணுயர் அரண்பல வெளவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே. | 443 |
பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை வென்வேல் வேந்தன் பகைதணிந்து இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே. | 444 |
புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத் துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை உள்லூதொறும் கலிழும் நெஞ்சம் வல்லே எம்மையும் வரவிழைந் தனையே. | 445 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 45. பாசறைப் பத்து, இலக்கியங்கள், பாசறைப், ஐங்குறுநூறு, பத்து, கற்பின், தனையே, அருந்தொழில், சங்க, எட்டுத்தொகை, வேந்தன்