ஐங்குறுநூறு - 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர் தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே. | 451 |
வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக் கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றே பகைவெங் காதலர் திறைதரு முயற்சி மெல்தோள் ஆய்கவின் மறையப் பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே. | 452 |
அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும் வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண் கார்தொடங் கின்றால் காலை அதனால் நீர்தொடங் கினவால் நெடுங்கணவர் தேர்தொடங் கின்றால் நம்வயி நானே. | 453 |
தளவின் பைங்கொடி தழீஇப் பையென நிலவின் அன்ன நேரும்பு பேணிக் கார்நய்ந்து எய்தும் முல்லை அவர் தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே. | 454 |
அரசுபகை தணிய முரசுபடச் சினை இ ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே அளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்து மின்னிழை ஞெகிழச் சாஅய்த் தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே. | 455 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து, இலக்கியங்கள், பருவங்கண்டு, பத்து, ஐங்குறுநூறு, கிழத்தி, யுரைத்த, கார்தொடங், கின்றால், தன்றே, சங்க, எட்டுத்தொகை, கார்செய், எழிலி