ஐங்குறுநூறு - 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
#2950;ர்குரல் எழிலி அழிதுளி சிதறிக் கார்தொடங் கின்றால் காமர் புறவே வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே. | 411 |
காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப் பூவணி கொண்டன்றால் புறவே பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே. | 412 |
நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின் நின்னே போல மஞ்ஞை யாலக் கார்தொடங் கின்றால் பொழுதே பேரியல் அரிவை நாநயத்தகவே. | 413 |
புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக் கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி மெல்லியல் அரிவை கண்டிகு மல்லல் ஆகிய மணங் கமழ் புறவே. | 414 |
இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே உதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே இனிதுடன் கழிக்கின் இளமை இனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே. | 415 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, புறவே, இலக்கியங்கள், கிழவன், பருவம், ஐங்குறுநூறு, பாராட்டுப், பத்து, பொழுதே, அரிவை, மடந்தைநாம், விரைந்தே, கார்தொடங், எட்டுத்தொகை, சங்க, கின்றால், ஆடுகம்