ஐங்குறுநூறு - 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின் மடப்பிடி தழீஇய மாவே சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே. | 416 |
கார்கலந் தன்றால் புறவே பலவுடன் நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து தாதார் பிரசம் மொய்ப்பப் போதார் கூந்தல் முயங்கினள் எம்மே. | 417 |
வானம் பாடி வறங்களைந்து ஆனாது அழிதுளி தலைஇய புறவின் காண்வர வானர மகளா நீயே மாண்முலை அடைய முயங்கி யோயே. | 418 |
உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப் பிரிந்துறல் அறியா விருந்து கவவி நம்போல் நயவரப் புணர்ந்தன கண்டிகு மடவரல் புறவின் மாவே. | 419 |
பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத் தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு நன்னலம் எய்தினை புறவே நின்னைக் காணிய வருதும் யாமே வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே. | 420 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, இலக்கியங்கள், கிழவன், பத்து, ஐங்குறுநூறு, பருவம், பாராட்டுப், யாமே, புறவே, புறவின், மடவரல், சங்க, எட்டுத்தொகை, போதார், மாவே