ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து
மாதர் உண்கண் மகன்விளை யாடக் காதலித் தழீஇ இனிதிருந் தனனே தாதார் பிரசம் ஊதும் போதார் புறவின் நாடுகிழ வோனே. | 406 |
நய்ந்த காதலித் தழீஇப் பாணர் நய்ம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பின் நாடுகிழ வோனே. | 407 |
பாணர் முல்லை பாடச் சுடரிழை வணுதல் அரிவை முல்லை மலைய இனிதிருந் தனனே நெடுந்தகை துனிதீர கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. | 408 |
புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவையினள் இனிது மன்றஅவர் கிடக்கை நனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே. | 409 |
மாலை முன்றில குறுங்கால் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணனது யாழே. | 410 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து , இலக்கியங்கள், செவிலி, ஐங்குறுநூறு, புதல்வன், கூற்றுப், பத்து, வோனே, பாணர், முல்லை, நாடுகிழ, காதலித், எட்டுத்தொகை, சங்க, இனிதிருந், தனனே