ஐங்குறுநூறு - 3. கள்வன் பத்து
கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன் வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன் எம்மும் பிறரும் அறியான் இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய். | 26 |
செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன் தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு எவ்வளை நெகிழ சாஅய் அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய். | 27 |
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின் தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு ஒண்டொடி நெகிழச் சாஅய் மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய். | 28 |
மாரி கடிகொளக் காவலர் கடுக வித்திய வென்முளை கள்வன் அறுக்கும் கழனி ஊரன் மார்புற மரீஇத் திதலை அல்குல் நின்மகள் பசலை கொள்வது எவன்கொல் அன்னாய். | 29 |
வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன் தண்அக மண்அளை நிறைய நெல்லின் இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள் பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய். | 30 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 3. கள்வன் பத்து, கள்வன், எவன்கொல், அன்னாய், இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, தண்அக, ஊரற்கு, சாஅய், செறுவில், எட்டுத்தொகை, சங்க, அறுக்கும், ஊரன்