ஐங்குறுநூறு - 3. கள்வன் பத்து
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப் புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும் தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும் உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் | 21 |
அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன் முள்ளி வேரளைச் செல்லும் ஊரன் நல்லசொல்லி மணந்துஇனி நீயேன் என்றது எவன்கொல் அன்னாய் | 22 |
முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப் பூக்குற்று எய்திய புனல் அணி யூரன் தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித் தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய். | 23 |
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்லை தன்னும் முதலைத்து அவனூர் எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய். | 24 |
அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய் வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும் கழனி யூரன் மார்புபலர்க்கு இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். | 25 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 3. கள்வன் பத்து, கள்வன், அன்னாய், இலக்கியங்கள், எவன்கொல், பத்து, முள்ளி, புள்ளிக், ஐங்குறுநூறு, யூரன், சங்க, எட்டுத்தொகை, அறுக்கும்