ஐங்குறுநூறு - 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து.
பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர் யார்கொல் அளியர் தாமே வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைக் காத லோரே. | 381 |
புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல் திருந்துகழ் காளையொடு அருஞ்சுரம் கழிவோள் எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப் புனையிழை மகளிர்ப் பயந்த மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. | 382 |
கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற நெடுங்காண் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வல்ஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ள மகிழ்கூர்ந்துஅன்றே பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே. | 383 |
சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர் நும்மொன்று இரந்தனென் மொழிவல் எம்மூர் ஆய்நயந்து எடுத்த ஆய்நலம் கலின ஆரிடை இறந்தனள் என்மின் நேர் இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே. | 384 |
கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக் கோள்வல் வேங்கை மலையிறக்கொழிய வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக் கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள் நல்தோள் நயந்துபா ராட்டி என்கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே. | 385 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து., இலக்கியங்கள், உடன்போக்கின், பத்து, ஐங்குறுநூறு, இடைச், சுரத்து, உரைத்த, இறந்தனள், அருஞ்சுரம், சங்க, எட்டுத்தொகை