ஐங்குறுநூறு - 38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து.
நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று காடுபடு தீயின் கனலியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை உண்கண் மடவரல் போக்கிய புணர்த்த அறனில் பாலே. | 376 |
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் மன்றஎன் மகளே பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே. | 377 |
செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப் போகிய அவட்கோ நோவேன் தேமொழித் துணையிலள் கலிழும் நெஞ்சின் இணையேர் உண்கண் இவட்குநோ வதுமே. | 378 |
தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை இனக்களிறு வழங்கும் சோலை வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே. | 379 |
அத்தம் நீளிடை அவனொடு போகிய முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே. | 380 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து., இலக்கியங்கள், போக்கிய, மக்கட், ஐங்குறுநூறு, பத்து, வழித், தாயிரங்கு, அத்தம், போகிய, மடவரல், எட்டுத்தொகை, சங்க, கலிழும், உண்கண்