ஐங்குறுநூறு - 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து.
புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம் நய்ந்த காதலற் புணர்ந்துசென் றனளே நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட இடும்பை உறவிநின் கடுஞ்சூல் மகளே. | 386 |
அறம்புரி அருமறை நவின்ற நாவில் திறம்புரி கொள்கை அந்தணீர் தொழுவலென்று ஒள்தொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை இந்துணை இனிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கல் மலையிறந்த் தோளே. | 387 |
நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச் சிறுவரை இறப்பின் காண்குவை செறிதொடிப் பொன்னேர் மேணி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே. | 388 |
செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள் மையணல் காளையொடு பைய இயலிப் பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை சென்றனள் என்றிர் ஐய ஒன்றின வோஅவள் அம்சிலம் படியே. | 389 |
நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது பல்லூழ் மறுகி வனவு வோயே திண்தோள் வல்வில் காளையொடு கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே. | 390 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து., இலக்கியங்கள், உடன்போக்கின், பத்து, ஐங்குறுநூறு, இடைச், சுரத்து, உரைத்த, காளையொடு, சுரத்திடை, சங்க, எட்டுத்தொகை, கண்டனெம்