ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து
உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தை இய மடவரல் மகளே கண்ணினும் கதவநின் முலையே முலையினும் கதவநின் தடமென் தோளே. | 361 |
பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச் சிறுகண் யானை உறுபகை நினையாது யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப அருள்புரி நெஞ்சம் உய்த்தர இருள்பொர நின்ற இரவி னானே. | 362 |
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவல் எயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே. | 363 |
முளமா வல்சி எயினர் தங்கை இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச் சொல்லினேன் இரக்கும் அளவை வெள்வேல் விடலை விரையா தீமே. | 364 |
கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும் நலமாண் எயிற்றி போலப் பலமிகு நல்நலம் நயவர உடையை என்நோற் றனையோ மாஇன் தளிரே. | 365 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து, இலக்கியங்கள், முன்னிலைப், ஐங்குறுநூறு, பத்து, எயினர், கதவநின், எட்டுத்தொகை, சங்க