ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து
அன்னாய் வாழிவேண் டன்னை தோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயின் என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே முறியிணர்க் கோங்கM பயந்த மாறே. | 366 |
பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி விரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே. | 367 |
எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர் பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும் தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ பெருமநின் எம்மெல் ஓதி அழிவிலள் எனினே. | 368 |
வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில் முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறிநீ செய்தனை என்ப அலரே குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே. | 369 |
வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந்து உறையப் பட்டோள் யாவ ளோஎம் மறையா தீமே. | 370 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து, இலக்கியங்கள், முன்னிலைப், ஐங்குறுநூறு, பத்து, வேனில், கோங்கின், எட்டுத்தொகை, சங்க