ஐங்குறுநூறு - 36. வரவுரைத்த பத்து
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் யானை பிணித்த பொன்புனை கயிற்றின் ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே. | 356 |
குரவம் மலர மரவம் பூப்பச் சுரன்அணி கொண்ட கானம் காணூஉ அழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின் அம்கலிழ் மாமை கவின வந்தனர் தோழிநம் காத லோரே. | 357 |
கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும் நீடவிடுமோ மற்றே நீடுநினைந்து துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி உடிஅத்தெழு வெள்ள மாகிய கண்ணே. | 358 |
அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத் தவநனி நெடிய வாயின இனியே அணியிழை உள்ளியாம் வருதலின் அணிய வாயின சுரத்தைடை யாறே. | 359 |
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை அரிய வாயினும் எளிய அன்றே அவவூறு நெஞ்சம் கலவுநனி விரும்பிக் கடுமான் திண்தேர் கடைஇ நெடுமான் நோக்கிநின் உள்ளி வரவே. | 360 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 36. வரவுரைத்த பத்து, இலக்கியங்கள், வரவுரைத்த, ஐங்குறுநூறு, பத்து, வாயின, துடைத்தொறும், எட்டுத்தொகை, சங்க