ஐங்குறுநூறு - 36. வரவுரைத்த பத்து
அத்த பலவின் வெயில்தின் சிறுகாய் அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடுபின் ஒழிய வந்தனர் தீர்கினிப் பல்லிதல் உண்கண் மடந்தைநின் நல்லெழில் அல்குல் வாடிய நிலையே. | 351 |
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப் பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும் வெஞ்சுரம் அரிய என்னார் வந்தனர் தோழிநம் காத லோரே. | 352 |
எரிக்கொடி கலை இய செவ்வரை போலச் சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம் நீ இனிது முயங்க வந்தனர் மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. | 353 |
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன்வந் தனரே தெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே. | 354 |
திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச் சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச் சிறுகண் யானை திரிதரும் நெறிவிலங்கு அதர கானத் தானே. | 355 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 36. வரவுரைத்த பத்து, இலக்கியங்கள், வரவுரைத்த, வந்தனர், ஐங்குறுநூறு, பத்து, யானை, அரிய, சங்க, எட்டுத்தொகை, கழியும்