ஐங்குறுநூறு - 35. இளவேனிற் பத்து.
அவரோ வாரார் தான்வந் தன்றே அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச் செங்கண இருங்குயில் அறையும் பொழுதே. | 346 |
அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. | 347 |
அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. | 348 |
அவரோ வாரார் தான்வந் தன்றே பொரிகால் மாஞ்சினை புதைய எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே. | 349 |
அவரோ வாரார் தான்வந் தன்றே வேம்பின் ஒண்பூ உறப்பத் தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே. | 350 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 35. இளவேனிற் பத்து., வாரார், தான்வந், தன்றே, அவரோ, பொழுதே, இலக்கியங்கள், இளவேனிற், பத்து, ஐங்குறுநூறு, எட்டுத்தொகை, சங்க