ஐங்குறுநூறு - 28. குரக்குப் பத்து
அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன் தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே. | 271 |
கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ் அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலது உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன் இரவின் வருதல் அறியான் வரும் வரும் என்பள் தோழியாயே. | 272 |
அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர் புந்தலை மந்தி வன்பறழ் ஆரும் நன்மலை நாட நீசெலின் நின்நயத்து உறைவி என்னினும் கழில்மே. | 273 |
மந்திக் கணவன் கல்லாக் கொடுவன் ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன் குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன் சென்றனன் வாழி தோழியென் மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே. | 274 |
குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன் சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறை மாரி மொக்குள் புடைக்கும் நாட யாம்நின் நயத்தனம் எனினும்எம் ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே. | 275 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 28. குரக்குப் பத்து, இலக்கியங்கள், நாடன், பத்து, குரக்குப், ஐங்குறுநூறு, வன்பறழ், வரும், மந்திக், சங்க, மந்தி, எட்டுத்தொகை