ஐங்குறுநூறு - 27. கேழற் பத்து
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு குறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன் நனிநாண் உடைமையம் மன்ற பனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே. | 266 |
சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி ஐவனம் கவரும் குன்ற நாடன் வண்டுபடு கூந்தலைப் பேணிப் பண்பில சொல்லும் தேறுதல் செத்தே. | 267 |
தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு வளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர் வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும் நன்மலை நாடன் பிரிதல் என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே. | 268 |
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை விஅளைந்த செறுவில் தோன்றும் நாடன் வாராது அவண்உறை நீடின் நேர்வளை இணை ஈர் ஓதி நீயழத் துணைநனி இழக்குவென் மடமை யானே. | 269 |
கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில் தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும் புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை காணினும் கலிழுநோய் செத்துத் தாம்வந் தனர்நம் காத லோரே. | 270 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 27. கேழற் பத்து, நாடன், இலக்கியங்கள், கேழற், பத்து, கேழல், ஐங்குறுநூறு, கானவர், சிறுகண், எட்டுத்தொகை, சங்க, பெருஞ்சின