ஐங்குறுநூறு - 28. குரக்குப் பத்து
மந்திக் காதலன் முறிமேய் கடுவன் தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப் பொங்கல் இளமழை புடைக்கும் நாட நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ கன்முகை வேங்கை மலரும் நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே. | 276 |
குறவர் முன்றில் மாதீண்டு துறுகல் கல்லா மந்தி கடுவனோடு உகளும் குன்ற நாடநின் மொழிவல் என்றும் பயப்ப நீத்தல் என்இவள் கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே. | 277 |
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் குரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சி மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன் உற்றோர் மறவா நோய்தந்து கண்டோர் தண்டா நலங்கொண் டனனே. | 278 |
கல் இவர் இற்றி புல்லுவன எறிக் குளவி மேய்ந்த மந்தி துணையோடு வரைமிசை உகளும் நாட நீவரின் கல்லகத் ததுஎம் ஊரே அம்பல் சேரி அலராம் கட்டே. | 279 |
கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு இருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல் மதிபுடைப் பதுபோல தோன்றும் நாட வரைந்தனை நீஎனக் கேட்டுயான் உரைத்தனென் அல்லனோ அதென் யாய்க்கே. | 280 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 28. குரக்குப் பத்து, இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, குரக்குப், கல்லா, மந்தி, உகளும், நாடன், மந்திக், எட்டுத்தொகை, சங்க, வரைந்தனை