ஐங்குறுநூறு - 27. கேழற் பத்து
மெந்தினை மேய்ந்த தறுகண் பன்றி வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் எந்தை அறிதல் அஞ்சிக் கொல் அதுவே மன்ற வாரா மையே. | 261 |
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் இலங்குமலை நாடன் வரூஉம் மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே | 262 |
நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல் கட்டளை அன்ன கேழல் மாந்தும் குன்றுகெழு நாடன் தானும் வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே. | 263 |
இளம்பிறை யன்ன கோட்ட கேழல் களங்கனி யன்ன பெண்பாற் புணரும் அயந்திகழ் சில்மப கண்டிரும் பயந்தன மாதோநீ நய்ந்தோள் கண்ணே. | 264 |
புலிகொல் பெண்பால் புவரிக் குருளை வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும் குன்றுகெழு நாடன் மறந்தனன் பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே | 265 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 27. கேழற் பத்து, நாடன், இலக்கியங்கள், கேழற், ஐங்குறுநூறு, பத்து, கேழல், அன்ன, குன்றுகெழு, யன்ன, தறுகண், எட்டுத்தொகை, சங்க, மேய்ந்த, பன்றி, அடுக்கத்துத்