ஐங்குறுநூறு - 26. குன்றக் குறவன் பத்து.
குன்றக் குறவன் காதல் மடமகள் வண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள் இளையள் ஆயினும் ஆரணங் கினனே. | 256 |
குன்றக் குறவன் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள் ஆயரி நெடுங்கள் கலிழச் சேயதால் தெய்யநீ பிரியும் நாடே. | 257 |
குன்றக் குறுவன் காதல் மடமகள் அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையும் ஆயின் கொடுத்தனெம் ஆயினோம் நன்றே இன்னும் ஆனாது நன்னுதல் துயிரே. | 258 |
குன்றக் குறவன் காதல் மடமகள் மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித் தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள் மலர்ந்த காந்தள் நாறிக் கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே. | 259 |
குன்றக் குறவன் காதல் மடமகள் மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல பைம்புறப் பைங்கிளி ஒப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. | 260 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 26. குன்றக் குறவன் பத்து., குன்றக், குறவன், மடமகள், காதல், இலக்கியங்கள், ஐங்குறுநூறு, பத்து, கொடிச்சியைப், எட்டுத்தொகை, சங்க