ஐங்குறுநூறு - 24. தெய்யோப் பத்து.
யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ. | 231 |
போதார் கூந்தல் இயலணி அழுங்க ஏதி லாளனை நீபிரிந் ததற்கே அழவிர் மணிப்பூண் அனையப் பெயலா னாஎன் கண்ணே தெய்யோ. | 232 |
வருவை யல்லை வாடைநனி கொடிதே அருவரை மருங்கின் ஆய்மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவிநின் கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ. | 233 |
மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய் நன்னுதல் பசத்த லாவது துன்னிக் கனவிற் காணும் இவளே நனவிற் காணாள்நின் மார்பே தெய்யோ. | 234 |
கையுற வீழ்ந்த மையில் வன்மொடு அரிது காதலர்ப் பொழுதே அதனால் தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப் பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ. | 235 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 24. தெய்யோப் பத்து., தெய்யோ, இலக்கியங்கள், தெய்யோப், ஐங்குறுநூறு, பத்து, கூந்தல், எட்டுத்தொகை, சங்க