ஐங்குறுநூறு - 24. தெய்யோப் பத்து.
அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும் இன்னா வாடையும் மலையும் நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ. | 236 |
காமம் கடவ உள்ளம் இனைப்ப யாம்வந்து காண்பதோர் பருவம் ஆயின் ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. | 237 |
வாய்க்கோட்டு வயத்தகர் வாராது மாறினும் குரூஉமயிர்ப் புருவை ஆசையின் அல்கும் ஆஅல் அருவித் தண்மெருஞ் சிலம்ப நீஇவன் வரூஉம் காலை மேவரும் மாதோஇவள் நலனே தெய்யோ. | 238 |
சுரும்புணக் களித்த புகர்முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூநின் குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை நேரிறைப் பணைத்தோள் ஞெகிழ வாரா யாயின் வாழேம் தெய்யோ. | 239 |
அறியோம் அல்லேம் அறிந்தனம் மாதோ பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறும்நின் மார்பே தெய்யோ. | 240 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 24. தெய்யோப் பத்து., தெய்யோ, இலக்கியங்கள், தெய்யோப், ஐங்குறுநூறு, பத்து, எட்டுத்தொகை, சங்க